தமிழ் மொழியில் சிறந்த சொல் எதுவென்று தேடினேன், கவி என்றால், அது பொய் உரைக்கின்றது என்றேன், காதல் என்றால், அது காக்க வைக்கிறது என்றேன், அன்பு என்றால், அது கிடைப்பதற்கு அரிது என்றேன், அழகு என்றால், அது பார்வையை பொறுத்து என்றேன். பின்பு எச்சொல் தான் சிறந்தது என்றாள், உன் பெயர் கூறும் அச்சொல்லே, எச்சொல்லிலும் சிறந்தது என்றேன். தமிழ் மொழியில் அச்சொல்லே இல்லை என்றால், பின்பு தமிழ் மொழியில் கவி எதற்கு என்றாள், வடக்கோடு தெற்கினுடைய நதிகள் தான் இணையவில்லையே, நம் காதல் மொழியாவது இணையுமா, என்று முயன்று பார்த்தேன் என்றேன்.