உன் புன்னகையின் மொழி எதுவென்று தேடினேன்,
இவ்வுலகம் போதவில்லை என்று அவ்வுலகமும் நான் சென்றேன்,
எவ்வுலகம் சென்றாலும் மொழி என்ன நானறியேன்,
கம்பன் படைத்த படைப்பின் மொழி தான் உன் மொழியோ,
கேரளத்து பைங்கிளிகள் கூறும் மொழி தான் உன் மொழியோ,
பிறை கடல் தாண்டி சிங்களத்து மொழி தான் உன் மொழியோ,
வேதங்கள் படைத்த மொழி அம்மொழி தான் உன் மொழியோ,
விண்ணவர்கள் பேசும் மொழி அம்மொழி தான் உன் மொழியோ,
பிரம்மன் உனக்கென தனியாக மொழி படைத்தானோ,
தமிழ் கூறும் நல்லுலகின் தலைநகரம் சென்றடைந்தேன்,
அங்கும் வினவினேன் எம்மொழி அது என்று,
நான் வினவிய பொழுதினிலே எனக்கு கிடைத்த விடையானது,
ஐயே அது சும்மா தமாஷு!

Comments
Post a Comment